” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பட்டமரம்

ஜெயம்
ஒரு காலத்தில் அழகின் ஆட்சி
உறுமாறியே இப்போ அசிங்கமாய் காட்சி
கூடுகட்டி பறவைகள் வாழ்ந்ததொரு காலம்
தேடுவாரற்று மொட்டையாய் இன்றைய கோலம்

துள்ளிவந்து ஏறும் சிறுவர்கள் கூட
தள்ளிவைத்தே போனார் வேறிடம் விளையாட
சுட்ட வெய்யிலுக்கு ஒதுங்கிடும் கூட்டம்
பட்டமரமென்று நிழல்தரா மரமென ஓட்டம்

கட்டுடலை தாங்கியே பசுமையை சுமந்தது
வெட்டியதை எரிக்க நிலைமையும் அமைந்தது
தளிர்க்காது கிடக்கும் கிழட்டு மரம்
இழந்து பலத்தை தவிக்கும் மரம்

உயர்ந்த மரமும் உக்கிய வேரும்
பயணற்றுப் போனாலே இதுபோலவே யாரும்
படிப்பினை ஊட்டும் பட்டமரக் கதை
முடிவு மரமென்ன மானிடர்க்கும் வதை

Nada Mohan
Author: Nada Mohan