பட்ட மரம்

ராணி சம்பந்தர்

தொட்டதெல்லாமே துலங்குமே பூமி
போட்டதெலாம் பொன்னாகும் சாமி
நட்டதெலாம் மண்ணில் கண் திறக்க
நல் விளைச்சலில் நாதியற்றவரது
பணப் பெட்டி கோடீஸ்வரராக்குமே

எவர் கண்ணில் பட்டுக் கொட்டியதோ
சமரில் போட்ட குண்டு மழையில்
உதிரம் முட்டி உயிரோடு பயிருமெரிய
சுட்ட மண்ணோ சுடுகாடு ஆயிற்றே

காலஞ்செல்ல நாட்டியது பட்ட மரமாய்
விறகானதும் பச்சைமரம் மீண்டோர்க்கு
நிழலானதும் பசுமரத்தாணி ஆயிற்றே

முடக்கப்பட்ட வாழ்வு மூடப்பட்ட வாசலில்
பட்ட மரப் பனைகள் தலையில்லாமல்
முண்டமாய் நிற்பது போலத் தமிழன்
வாழ்வும் தலையற்ற சிலையாய்
முடஙகிப் போனதே பட்ட மரமாய் .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading