கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

பட்ட மரம்

ராணி சம்பந்தர்

தொட்டதெல்லாமே துலங்குமே பூமி
போட்டதெலாம் பொன்னாகும் சாமி
நட்டதெலாம் மண்ணில் கண் திறக்க
நல் விளைச்சலில் நாதியற்றவரது
பணப் பெட்டி கோடீஸ்வரராக்குமே

எவர் கண்ணில் பட்டுக் கொட்டியதோ
சமரில் போட்ட குண்டு மழையில்
உதிரம் முட்டி உயிரோடு பயிருமெரிய
சுட்ட மண்ணோ சுடுகாடு ஆயிற்றே

காலஞ்செல்ல நாட்டியது பட்ட மரமாய்
விறகானதும் பச்சைமரம் மீண்டோர்க்கு
நிழலானதும் பசுமரத்தாணி ஆயிற்றே

முடக்கப்பட்ட வாழ்வு மூடப்பட்ட வாசலில்
பட்ட மரப் பனைகள் தலையில்லாமல்
முண்டமாய் நிற்பது போலத் தமிழன்
வாழ்வும் தலையற்ற சிலையாய்
முடஙகிப் போனதே பட்ட மரமாய் .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading