நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

பட்ட மரம்

ராணி சம்பந்தர்

தொட்டதெல்லாமே துலங்குமே பூமி
போட்டதெலாம் பொன்னாகும் சாமி
நட்டதெலாம் மண்ணில் கண் திறக்க
நல் விளைச்சலில் நாதியற்றவரது
பணப் பெட்டி கோடீஸ்வரராக்குமே

எவர் கண்ணில் பட்டுக் கொட்டியதோ
சமரில் போட்ட குண்டு மழையில்
உதிரம் முட்டி உயிரோடு பயிருமெரிய
சுட்ட மண்ணோ சுடுகாடு ஆயிற்றே

காலஞ்செல்ல நாட்டியது பட்ட மரமாய்
விறகானதும் பச்சைமரம் மீண்டோர்க்கு
நிழலானதும் பசுமரத்தாணி ஆயிற்றே

முடக்கப்பட்ட வாழ்வு மூடப்பட்ட வாசலில்
பட்ட மரப் பனைகள் தலையில்லாமல்
முண்டமாய் நிற்பது போலத் தமிழன்
வாழ்வும் தலையற்ற சிலையாய்
முடஙகிப் போனதே பட்ட மரமாய் .

Nada Mohan
Author: Nada Mohan