” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பட்ட மரம்

ராணி சம்பந்தர்

தொட்டதெல்லாமே துலங்குமே பூமி
போட்டதெலாம் பொன்னாகும் சாமி
நட்டதெலாம் மண்ணில் கண் திறக்க
நல் விளைச்சலில் நாதியற்றவரது
பணப் பெட்டி கோடீஸ்வரராக்குமே

எவர் கண்ணில் பட்டுக் கொட்டியதோ
சமரில் போட்ட குண்டு மழையில்
உதிரம் முட்டி உயிரோடு பயிருமெரிய
சுட்ட மண்ணோ சுடுகாடு ஆயிற்றே

காலஞ்செல்ல நாட்டியது பட்ட மரமாய்
விறகானதும் பச்சைமரம் மீண்டோர்க்கு
நிழலானதும் பசுமரத்தாணி ஆயிற்றே

முடக்கப்பட்ட வாழ்வு மூடப்பட்ட வாசலில்
பட்ட மரப் பனைகள் தலையில்லாமல்
முண்டமாய் நிற்பது போலத் தமிழன்
வாழ்வும் தலையற்ற சிலையாய்
முடஙகிப் போனதே பட்ட மரமாய் .

Nada Mohan
Author: Nada Mohan