அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

பணி

ராணி சம்பந்தர்

உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்

பூரிப்பூட்டும் பருவங்கள்
வயிறும் நினைவூட்டவே
பணியிடம் தொழிலாற்றி
பதவி உழைக்கும் யோகம்

தரிப்பூட்டும் திருவுருவங்கள்
பரிவூட்டவே தொண்டுப் பணி
ஆற்றி எமைச் சீராட்டிப் பாராட்டி
மேனி வளைக்கும் ஆகமங்கள்

கழிப்பூட்டுமே புருவங்களில்
சீர் தூக்கி வேரூட்டும் பணி-
மனையாளின் பணியகமோ
கருவூட்டும் இல்லப் பணி
ஈடிணையற்ற சொல்லவே
முடியாத குடும்ப யாகமே .!

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading