பணி

ராணி சம்பந்தர்

உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்

பூரிப்பூட்டும் பருவங்கள்
வயிறும் நினைவூட்டவே
பணியிடம் தொழிலாற்றி
பதவி உழைக்கும் யோகம்

தரிப்பூட்டும் திருவுருவங்கள்
பரிவூட்டவே தொண்டுப் பணி
ஆற்றி எமைச் சீராட்டிப் பாராட்டி
மேனி வளைக்கும் ஆகமங்கள்

கழிப்பூட்டுமே புருவங்களில்
சீர் தூக்கி வேரூட்டும் பணி-
மனையாளின் பணியகமோ
கருவூட்டும் இல்லப் பணி
ஈடிணையற்ற சொல்லவே
முடியாத குடும்ப யாகமே .!

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading