பண்டிகை வந்தாலே

சிவதர்சனி இரா

வியாழன் கவிதை நேரத்துக்காக..

கவி இலக்கம்-2052

பண்டிகை வந்தாலே..
காலங்கள் விரைந்தோடும்
காத்திருப்பு பலமாகும்
சோர்ந்திருந்த உளத்திலெல்லாம்
சோர்வகன்று சுறுசுறுப்பாகும்..

வீடு வாசல் சுத்தம் காணும்
விருந்துகளும் தடல் புடலாகும்
பலகாரச் சூடு மிகும்
பக்கத்துக்காரர் கூடும் காலமாகும்..

உறவுகளும் கூடிக்கொள்ளும்
உணர்வுகளும் பரவடமாகும்
உள்ளத்தில் உவகை பொங்கும்
உத்வேகம் கடலாய் ஆகும்

ஊரில் தானே இத்தனை ஆகும்
ஊர் விட்டே வந்தால் மாற்றமாகும்
பேருக்கும் மட்டும் வந்து போகும்
பெருமை என்ன கூறும் பாரும்..

வாட்சப்பில் வாழ்த்துக் குவியும்
வார்த்தை ஜாலம் பெருகித்தள்ளும்
பெருமை அளந்தே காலம் செல்லும்
பெறுமதி இல்லாப் பண்டிகை ஆகும்
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading