பதில் ஒன்று கூறிடுமே

ராணி சம்பந்தர்

திலீபன் என்றாலே
தாய்த் திரு நாட்டின்
தியாகமென வீசுங்
காற்றே மூசிடுமே

பத்து மாதக் குழந்தை
தாய்ப்பால் கூடக் குடியாத
பாலகன் பார்த்திபன்
எம்முடன் கூடிக் செய்த
சின்னக் குறும்பு பேசிடுமே

தாய்மண் நேசித்த இலட்சிய
நாயகனே ! 5 கோரிக்கையிலே
15 ஆம் திகதி பட்டினிப் போராட்டம்

நல்லூர் முன்றலில் பல்லில் கூடப்
பச்சைத்தண்ணீர் படாது தொண்டை
வரண்டு 12 ஆம் நாள் உயிர் நீத்த
உத்தமனே தியாகி திலீபனே !

உன் மூச்சுக்காற்றே பல்கிப் பெருகி
எட்டுத் திக்கும் உலாவி வரும் வேளை
பதில் ஒன்று கூறி ஆசி தந்திடுமே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading