நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பதில் ஒன்று கூறிடுமே

ராணி சம்பந்தர்

திலீபன் என்றாலே
தாய்த் திரு நாட்டின்
தியாகமென வீசுங்
காற்றே மூசிடுமே

பத்து மாதக் குழந்தை
தாய்ப்பால் கூடக் குடியாத
பாலகன் பார்த்திபன்
எம்முடன் கூடிக் செய்த
சின்னக் குறும்பு பேசிடுமே

தாய்மண் நேசித்த இலட்சிய
நாயகனே ! 5 கோரிக்கையிலே
15 ஆம் திகதி பட்டினிப் போராட்டம்

நல்லூர் முன்றலில் பல்லில் கூடப்
பச்சைத்தண்ணீர் படாது தொண்டை
வரண்டு 12 ஆம் நாள் உயிர் நீத்த
உத்தமனே தியாகி திலீபனே !

உன் மூச்சுக்காற்றே பல்கிப் பெருகி
எட்டுத் திக்கும் உலாவி வரும் வேளை
பதில் ஒன்று கூறி ஆசி தந்திடுமே .

Nada Mohan
Author: Nada Mohan