பாலதேவகஜன்

பணம்

தினம் உனை தேடி ஓடி
திக்கெட்டும் அலைகின்றேன்
மனம் கொண்ட பேராசை
உனையே பின்னே தொடருதே.

கனதியானது நீ என்று
என் காலத்தை கரைக்கிறேன்
கட்டிலில் நான் வந்தபின்னே
கனதி எதுவென்று உணர்கின்றேன்.

உனையே நேசித்ததாலே
உறவுகளை வஞ்சித்தேன்
உயிர் ஊசலாடும் தருணம்
எனையே வஞ்சித்தேன்.

கொண்ட குணம் கெட்டேன்
கண்ட கடியதும் கற்றேன்
நீ என் கையில்
நிறைவாய் இருந்ததினாலே.

தேவைகள் தீர்ப்பதில்
தேவதை நீ!
தேவையில்லா வில்லங்கங்களின்
வேதனை நீ!

சோதனைகளில் சோரம்போகாது
சாரமாய் நின்றதும் நீ!
சாதனைகளின் படைப்பினில்
தலைக்கனமாய் நின்றதும் நீ!

நிறைவாய் இருந்தால்
நிம்மதி நீ!
நிறையவே இருந்தால்
பெருந்துயர் நீ!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

    Continue reading