18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
பாலதேவகஜன்
பணம்
தினம் உனை தேடி ஓடி
திக்கெட்டும் அலைகின்றேன்
மனம் கொண்ட பேராசை
உனையே பின்னே தொடருதே.
கனதியானது நீ என்று
என் காலத்தை கரைக்கிறேன்
கட்டிலில் நான் வந்தபின்னே
கனதி எதுவென்று உணர்கின்றேன்.
உனையே நேசித்ததாலே
உறவுகளை வஞ்சித்தேன்
உயிர் ஊசலாடும் தருணம்
எனையே வஞ்சித்தேன்.
கொண்ட குணம் கெட்டேன்
கண்ட கடியதும் கற்றேன்
நீ என் கையில்
நிறைவாய் இருந்ததினாலே.
தேவைகள் தீர்ப்பதில்
தேவதை நீ!
தேவையில்லா வில்லங்கங்களின்
வேதனை நீ!
சோதனைகளில் சோரம்போகாது
சாரமாய் நின்றதும் நீ!
சாதனைகளின் படைப்பினில்
தலைக்கனமாய் நின்றதும் நீ!
நிறைவாய் இருந்தால்
நிம்மதி நீ!
நிறையவே இருந்தால்
பெருந்துயர் நீ!
Author: Nada Mohan
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...