முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

பாலதேவகஜன்

பணம்

தினம் உனை தேடி ஓடி
திக்கெட்டும் அலைகின்றேன்
மனம் கொண்ட பேராசை
உனையே பின்னே தொடருதே.

கனதியானது நீ என்று
என் காலத்தை கரைக்கிறேன்
கட்டிலில் நான் வந்தபின்னே
கனதி எதுவென்று உணர்கின்றேன்.

உனையே நேசித்ததாலே
உறவுகளை வஞ்சித்தேன்
உயிர் ஊசலாடும் தருணம்
எனையே வஞ்சித்தேன்.

கொண்ட குணம் கெட்டேன்
கண்ட கடியதும் கற்றேன்
நீ என் கையில்
நிறைவாய் இருந்ததினாலே.

தேவைகள் தீர்ப்பதில்
தேவதை நீ!
தேவையில்லா வில்லங்கங்களின்
வேதனை நீ!

சோதனைகளில் சோரம்போகாது
சாரமாய் நின்றதும் நீ!
சாதனைகளின் படைப்பினில்
தலைக்கனமாய் நின்றதும் நீ!

நிறைவாய் இருந்தால்
நிம்மதி நீ!
நிறையவே இருந்தால்
பெருந்துயர் நீ!

Nada Mohan
Author: Nada Mohan