வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

பாலதேவகஜன்

பிள்ளை கனியமுதே

பெரு வரமாய் நீ! பிறக்க
மெருகியதே என் வாழ்வு
கருகியெனி போகமாட்டேன்
உனதன்பில் உருகினின்று
உயிர் வாழ்வேன்.

கனவுக்குள் நான் வாழ்ந்த
காலங்களை கரைத்தவளே!
உன் கனவே நானென என்
கரங்களில் தவழ்பவளே!
என் காயமும் தியாகமும்
உனக்காகவே தானம்மா!

உன் மழலை குரலாலே
குறுகிய என்பெயரை
குறுக்கி நீ கூப்பிடும்போது
மீண்டும் மீண்டும் நீ
கூப்பிட வேண்டுமென்று
வேண்டுமென்றே கேட்காதவனாய்
நடித்துக்கொண்டேயிருப்பேன்.
அந்த ஒற்றை குரலை
என் வாழ்நாள் முழுவதும்
நான் கேட்டிட வேண்டும்.

உன் பிஞ்சு கால்களால்
நீ என் நெஞ்சை
உதைந்திட்டபோது
நான் உணர்ந்த இன்பம்
இவ்வுலகினில் வேறெங்குமில்லை
என் செல்ல கண்மணியே!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading