22
Jan
முதுமையுள் மூ்ழ்கிடவா……..
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026
அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது பணி
கூர்மை அறிவு கொண்டு கவனி
புரியாத புதிராய் எனக்குள்ளே
பல அத்தியாயம் என்னுள்ளே
விடை தெரிவது போலிருக்கும்
வினாவிற்குள்ளே மறைந்திருக்கும்
சிந்தனை எனும் உளியால்
சிறுகச் சிறுக செதுக்கிப் பார்
கல்லாய் இருந்த என்னுள்ளும்
கற்பனை அறிவு பெற்றிடுவாய்.
வினவியவரை புதிராய்
விடை தெரியாதவரை மர்மமாய்
தண்ணீரில் பிறப்பும் இறப்பும்
தரமானவன் சமையலுக்கு யாரிவன்?
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.