புதிர் 98

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026

அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது பணி
கூர்மை அறிவு கொண்டு கவனி

புரியாத புதிராய் எனக்குள்ளே
பல அத்தியாயம் என்னுள்ளே
விடை தெரிவது போலிருக்கும்
வினாவிற்குள்ளே மறைந்திருக்கும்

சிந்தனை எனும் உளியால்
சிறுகச் சிறுக செதுக்கிப் பார்
கல்லாய் இருந்த என்னுள்ளும்
கற்பனை அறிவு பெற்றிடுவாய்.

வினவியவரை புதிராய்
விடை தெரியாதவரை மர்மமாய்
தண்ணீரில் பிறப்பும் இறப்பும்
தரமானவன் சமையலுக்கு யாரிவன்?

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading