புதுவருடம்

சந்த கவி இலக்கம்_187
சிவாஜினி சிறிதரன் 5
“புது வருடம்”
இன்பம் பெருகிட
துன்பம் விலகிட
புன்னகை சிந்திட
புது வசந்தம் வந்திட !

விசுவாவசு வருடம்
விடிகாலை பொழுதில்
மருத்து நீர்வைத்து முழுகி
புத்தாடை அணிந்து!

கோலம் போட்டு
நிறைகுடம் வைத்து
பொங்கலிட்டு படையலிட்டு!

கைவிசேடம்
பரிமாறி
இனிப்பு பண்டங்கள்
உண்டு மகிழ்ந்து
அயலவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து!

ஆலயதர்சனமும் ஆனந்தம் காணும்
உறவுகளுக்கு உரிமையுடன் வாழ்த்துரைத்து புது வருடத்தை
வரவேற்பதே!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
12.04.25

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading