பொன்.தர்மா.

வணக்கம்.
சந்தம் சிந்தும் கவி நேரம்.
********குடு குடு கிழவி *******
“”‘””‘””'”’””””””””””””””””””””””
வக்கணையாய்ப் பேசும் வாயாடிக் கிழவி அவள்.
வாயாலை புகைவிட்டே வங்காளமும் போய் வருவாள்.

செதுக்கிய சிலையாட்டம் , இளம் பருவக்,காலமதில்.
உருகியே , தடியாக , ஓய்ந்த இந்த, நேரமதில்.

வாயில் , தடதடக்கு , சொல்லில் பெரு மிடுக்கு .
காலில் உறுதி வேண்டி , கம்பு ஒன்று கையில் பிடிப்பு.

ஆடு , மாடு , பட்டியென , வருமானமும் அள்ளிக் கொட்டும்.
கோடிப் புறங்களெல்லாம், குலக்கு மாங்கனிகள் , தரை தட்டும்.

கொல்லைப் பக்கத்திலை , கோணலான ஒரு பட்டை .
கோழிகளோ , கும்பலாகப்
போட்டிருக்கும் , அதிலே , நிறைய முட்டை .

சள்ளையிலே , சதிராடும் , சாயம் கழன்ற கறுப்புப் , பை .
கிள்ளி அசை போட, அதற்குள்ளே நுழையும், அடிக்கடி , அவரது , கை .

பெற்றுப் போட்டதுவும், கிழவியோ,எட்டுப் பத்து. ( ஆனால்)
எடுபிடிக்கோ உதவுவது, பக்கத்து வீட்டுப் , பட்டு ….
குடு குடு கிழவி…
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading