தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் .
இல.527
இசை
********
தூங்கிடும் உள்ளங்களைத், தட்டியே எழுப்பும்.
துடிக்கின்ற இதயத்திற்குத் ,தூண்டு கோலாக இருக்கும்.

தேம்பி அழும் குழந்தைக்குத், தேன்பாகுபோல இனிக்கும்.
தெவிட்டிடும் வார்த்தைகளுக்குச்,சுவையூட்டும் லட்டு ஆகும்.

தொலைந்த நினைவுகளைத், தூண்டில் போட்டு இழுக்க வைக்கும்.
தீராத வலிகளையும், தன் வீராப்பால் தணிய வைக்கும்.

ஆடாத தலைகளையும் , தனை அறியாது அசைய வைக்கும்.
ஆடுகின்ற தலைக்கிசைவாய், அடித்தொடையில் , தாளமும் போடும் .
இசை….இசை
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading