பொன்.தர்மா

இல.529
*** தடுமாறும் உலகம்***
ஆங்காங்கே அடித்தெடுக்கும், மடை பாயும் வெள்ளம்.
கோர வெறி கொண்டு கொளுத்தி டும் பாட்டு வெய்யில்.

வெறும் கையைக் காட்டிப், புறம் தள்ளும் பேராளர்கள்.

துரத்தியே பிடித்திடும், தூங்காத நோய்கள்.
விரட்டியே அடித்தாலும், வேறுருக் கொள்ளும் , வீரியக் கிருமிகள்.

ஏட்டிக்குப் போட்டியாய், எழுந்திடும் யுத்தங்கள்.
தூக்கிடும் வாளதனில் , தோய்ந்திடும் இரத்தங்கள்.
தடுமாறும் உலகம், தடுமாறும் உலகம்.
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading