பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

பொன்.தர்மா

இல.529
*** தடுமாறும் உலகம்***
ஆங்காங்கே அடித்தெடுக்கும், மடை பாயும் வெள்ளம்.
கோர வெறி கொண்டு கொளுத்தி டும் பாட்டு வெய்யில்.

வெறும் கையைக் காட்டிப், புறம் தள்ளும் பேராளர்கள்.

துரத்தியே பிடித்திடும், தூங்காத நோய்கள்.
விரட்டியே அடித்தாலும், வேறுருக் கொள்ளும் , வீரியக் கிருமிகள்.

ஏட்டிக்குப் போட்டியாய், எழுந்திடும் யுத்தங்கள்.
தூக்கிடும் வாளதனில் , தோய்ந்திடும் இரத்தங்கள்.
தடுமாறும் உலகம், தடுமாறும் உலகம்.
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan