போனும் போராட்டமும்

க.குமரன்

வியாழன் கவி
போனும் போராட்டமும்

சினிங்கிடும் போனை
கீறீ பேசி
அடுத்தவர் செய்தி
பார்த்து
அதற்கு ஒரு
பதில் போட்டு
வந்த கானோலியில்
மூழ்கி!
கழிந்த மணிகளை
காலம் காட்ட
உயிர் பெற
மின் ஊட்டி
ஓய்தலிலே கை
தேடும்
மௌனத்தை வளர்த்து
மனிதத்தை தொலைத்தாலும
இது இன்றி
வாழ்வேது !
போராட்டமா ??..

புன்னகைத்து
பொத்திக்
கொள்வேன்
என் பொக்கிஷத்தை !😁

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan