போர்க்கோலம்

ஜெயம்

உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள் போட்டி
பேயாய் ஒருவர்மேலொருவர் வல்லமையை காட்டி

அப்பாவி மக்களை நினைப்பவர் யார்
தப்பென்று தெரிந்துமே நிகழ்ந்திடும் போர்
மதிப்பில்லா பொருளாக சீவன்கள் இங்கே
குதித்தாடியே சுவாசம் பறிப்போர் அங்கே

உயிரை எடுத்தும் கொடுத்துமாடும் விளையாட்டாம்
இதயமின்றி வேட்டையாடி கொன்று களியாட்டம்
பயங்கரமான ஆயுதங்கள் வீசுவார் கண்மூடித்தனமாக
துரத்தியே விலங்கென வீழ்த்துவார் பிணமாக

இதுவென்ன பாவிகள் அதிகரித்த காலமா
அதிகார ஆளுமைகளால் அவனியில் அலங்கோலாமா
பூமியை எந்தமதக்கடவுள் படைத்தார் தெரியவில்லை
தாமதங்காட்டாது தீர்த்துவிடுமையா கொடுங்கோலர் தொல்லை

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading