” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போர்க்கோலம்

ஜெயம்

உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள் போட்டி
பேயாய் ஒருவர்மேலொருவர் வல்லமையை காட்டி

அப்பாவி மக்களை நினைப்பவர் யார்
தப்பென்று தெரிந்துமே நிகழ்ந்திடும் போர்
மதிப்பில்லா பொருளாக சீவன்கள் இங்கே
குதித்தாடியே சுவாசம் பறிப்போர் அங்கே

உயிரை எடுத்தும் கொடுத்துமாடும் விளையாட்டாம்
இதயமின்றி வேட்டையாடி கொன்று களியாட்டம்
பயங்கரமான ஆயுதங்கள் வீசுவார் கண்மூடித்தனமாக
துரத்தியே விலங்கென வீழ்த்துவார் பிணமாக

இதுவென்ன பாவிகள் அதிகரித்த காலமா
அதிகார ஆளுமைகளால் அவனியில் அலங்கோலாமா
பூமியை எந்தமதக்கடவுள் படைத்தார் தெரியவில்லை
தாமதங்காட்டாது தீர்த்துவிடுமையா கொடுங்கோலர் தொல்லை

Nada Mohan
Author: Nada Mohan