கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

போர்க்கோலம்

ஜெயம்

உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள் போட்டி
பேயாய் ஒருவர்மேலொருவர் வல்லமையை காட்டி

அப்பாவி மக்களை நினைப்பவர் யார்
தப்பென்று தெரிந்துமே நிகழ்ந்திடும் போர்
மதிப்பில்லா பொருளாக சீவன்கள் இங்கே
குதித்தாடியே சுவாசம் பறிப்போர் அங்கே

உயிரை எடுத்தும் கொடுத்துமாடும் விளையாட்டாம்
இதயமின்றி வேட்டையாடி கொன்று களியாட்டம்
பயங்கரமான ஆயுதங்கள் வீசுவார் கண்மூடித்தனமாக
துரத்தியே விலங்கென வீழ்த்துவார் பிணமாக

இதுவென்ன பாவிகள் அதிகரித்த காலமா
அதிகார ஆளுமைகளால் அவனியில் அலங்கோலாமா
பூமியை எந்தமதக்கடவுள் படைத்தார் தெரியவில்லை
தாமதங்காட்டாது தீர்த்துவிடுமையா கொடுங்கோலர் தொல்லை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading