போர்க்கோலம்

ஜெயம்

உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள் போட்டி
பேயாய் ஒருவர்மேலொருவர் வல்லமையை காட்டி

அப்பாவி மக்களை நினைப்பவர் யார்
தப்பென்று தெரிந்துமே நிகழ்ந்திடும் போர்
மதிப்பில்லா பொருளாக சீவன்கள் இங்கே
குதித்தாடியே சுவாசம் பறிப்போர் அங்கே

உயிரை எடுத்தும் கொடுத்துமாடும் விளையாட்டாம்
இதயமின்றி வேட்டையாடி கொன்று களியாட்டம்
பயங்கரமான ஆயுதங்கள் வீசுவார் கண்மூடித்தனமாக
துரத்தியே விலங்கென வீழ்த்துவார் பிணமாக

இதுவென்ன பாவிகள் அதிகரித்த காலமா
அதிகார ஆளுமைகளால் அவனியில் அலங்கோலாமா
பூமியை எந்தமதக்கடவுள் படைத்தார் தெரியவில்லை
தாமதங்காட்டாது தீர்த்துவிடுமையா கொடுங்கோலர் தொல்லை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading