போர்க்கோலம்

ஜெயம்

உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள் போட்டி
பேயாய் ஒருவர்மேலொருவர் வல்லமையை காட்டி

அப்பாவி மக்களை நினைப்பவர் யார்
தப்பென்று தெரிந்துமே நிகழ்ந்திடும் போர்
மதிப்பில்லா பொருளாக சீவன்கள் இங்கே
குதித்தாடியே சுவாசம் பறிப்போர் அங்கே

உயிரை எடுத்தும் கொடுத்துமாடும் விளையாட்டாம்
இதயமின்றி வேட்டையாடி கொன்று களியாட்டம்
பயங்கரமான ஆயுதங்கள் வீசுவார் கண்மூடித்தனமாக
துரத்தியே விலங்கென வீழ்த்துவார் பிணமாக

இதுவென்ன பாவிகள் அதிகரித்த காலமா
அதிகார ஆளுமைகளால் அவனியில் அலங்கோலாமா
பூமியை எந்தமதக்கடவுள் படைத்தார் தெரியவில்லை
தாமதங்காட்டாது தீர்த்துவிடுமையா கொடுங்கோலர் தொல்லை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading