தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

போர்க் கோலம்

ராணி சம்பந்தர்

காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்

மெல்ல மெல்லக் கூட்டுச் சேரும்
பக்கவாத்திய நாடுகளாலும்
உருக்குலையும் அரபு நாட்டில்
கருகிச் சாம்பலாகுதே பிஞ்சுப்
பாலகர்கள்

அணுகுண்டுப் போர்வையில்
ஒளிந்துள்ள மர்ம இரகசியம்
ஆயுத வாள் முனையில் தேன்
பூசிய விற்பனை ஆயதங்கள்

எதனால் இந்த அகோர வாழ்வு
ஏனிந்த உதிரம் கொட்ட வேள்வி
நாளும் பொழுதும் காணுமிந்த
சீர் கேடான நார் கிழிந்த போர்க்
கோலம்

ஆளுமந்த அரசுத் தலைவர்கள்
மூளுமிந்தத் தீப்பிழம்புப் பாளுங் கிணற்றில் வீழாது
சிந்தித்து செயலாற்றுவாரா
போர்க் கோலம் தொடராது .

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading