போர்க் கோலம்

ராணி சம்பந்தர்

காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்

மெல்ல மெல்லக் கூட்டுச் சேரும்
பக்கவாத்திய நாடுகளாலும்
உருக்குலையும் அரபு நாட்டில்
கருகிச் சாம்பலாகுதே பிஞ்சுப்
பாலகர்கள்

அணுகுண்டுப் போர்வையில்
ஒளிந்துள்ள மர்ம இரகசியம்
ஆயுத வாள் முனையில் தேன்
பூசிய விற்பனை ஆயதங்கள்

எதனால் இந்த அகோர வாழ்வு
ஏனிந்த உதிரம் கொட்ட வேள்வி
நாளும் பொழுதும் காணுமிந்த
சீர் கேடான நார் கிழிந்த போர்க்
கோலம்

ஆளுமந்த அரசுத் தலைவர்கள்
மூளுமிந்தத் தீப்பிழம்புப் பாளுங் கிணற்றில் வீழாது
சிந்தித்து செயலாற்றுவாரா
போர்க் கோலம் தொடராது .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading