மண் வளம்-2042 ஜெயா நடேசன்

மண்ணில் பிறந்தோர் மானிடரே
மண்ணில் பிறந்து வாழ்ந்தும்
மண்ணிற்கே மீண்டும் போவது
மண் வளம் முழுவதும் உயிர்களுக்கே
மண் வளம் குன்றினால் பண்படுத்தலாம்
மண் வளம் குன்ற காடுகள் அழிகிறது
மக்கள் சோம்பறிகளாக பசி பட்டியினில்
மண்ணை உழுது பண்படுத்தும் உழவர்
விண்ணை பார்த்து நிற்பனரே
மழை ஏற்று வளமாக்கி பலன் பெற
விதை முளைத்து மணியாகி உணவாகுமே
பெண்ணாகி பொறுமை காத்திடும் பூமியே
பொன் விளையும் பூமியும் மண் தானே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading