பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 272
02/07/2024 செவ்வாய்
“பள்ளிப் பருவம்”
————————-
வாழ்வு எனும் பத்தகத்தின்
வளம் கொண்ட பருவமிது!
தாழ்வு நிலை இருந்திடினும்..
தளர்வு தரா நிலையுமிது!

புத்தகப் பையோ ஒருகையில்,
பிடிக்கும் விரல் மறுகையில்,
வித்தகம் பெறச் செல்கையில்..
விக்கல் கேட்கும் அழுகையில்!

அதுவும் இதுவும் தருவோமென,
அழுகை மாற்றிக் கண்துடைத்து..
மெதுவாய் பள்ளி செல்லவைக்க..
மேலும் பலகணம் சென்றிடுமே!

காலம் கடிதெனச் சுழன்றுவிட..
கல்லூரி வாழ்வில் நுழைந்துவிட..
பாலம் போட-நண்பரும் வந்திட..
பசையென ஒட்டும் பள்ளி வாழ்வு!

சுற்றி இருக்கும் தோழர்களே..
சுவர்க்கமென நினைக்கும் மனம்!
பெற்றதாய் தந்தையும் பிறரும்….
பேதலிக்க வைக்கும் சில கணம்!

பட்டங்கள் பலவும் கிடைக்கும்..
பக்குவம் பெற்றுக் கொண்டால்!
சட்டத்தைக் கையில் எடுத்தால்..
சரித்திரமும் தலை கீழாகும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading