10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 239
24/10/2023 செவ்வாய்
ஆறு மனமே!
காலை மாலை யென்று
கடிதாய் வேலை செய்து
நாலு இரண்டு சேர்க்கும்
நாளும் வரும்-ஆறு மனமே!
வேலை யென்று சொல்லி
வெளி நாட்டிற் கனுப்பி
காலை வாரும் கயவர்
கருகுவர்-ஆறு மனமே!
பித்தம் வாதம் போன்ற
பீடை பிணிகள் நீங்கி
சித்தம் இனிக்க வாழும்
சிறப்பு வரும்-ஆறு மனமே!
குழந்தை குட்டி குஞ்சை
குண் டெறிந்து சிதைக்கும்
பாழும் கொடிய யுத்தம்
படியும்-ஆறு மனமே!
கூறு போட்டு உலகை
குட்டிச் சுவர் ஆக்கும்
நாறும் எந்த அரசும்
நலியும்- ஆறு மனமே!
நன்றி
“மதிமகன்”

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...