பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 251
30.01.2024 செவ்வாய்
“மாசி”
———
தைமகளுக் கிளை யவளே!
தலைமகளுக் கடுத் தவளே!
பொய் மழைக் குரியவளே!
போக மெலாம் தருபவளே!

நகுலமலை தருமோர் விழா,
நமக்கு அதுவோர் பெருவிழா,
அகிலமே அனுட்டிக்கு மிவ்விழா,
அதுசிவ ராத்திரித் தனிவிழா!

மாசி மகத்தின் மகத்துவம்,
மாமாங்க தீர்த்த உற்சவம்,
காசி முதல்வர் தரிசனம்,
காணக் கிடையா தனுதினம்!

மாசி மாதக் குளிரமைப்பு,
மாறுபட்ட ஓர் விறைப்பு,
ஊசி குத்தும் ஓருணர்வு,
உறக்கம் நீண்டிட மிகவிருப்பு!

நாசியும் மூக்கும் அடைக்கும்,
ஙயண நமனவும் ஒலிக்கும்,
மூசிமூசியே அடிக்கடி தும்மும்,
மூக்குடன் தொண்டை நோகும்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading