மனிதநேயம்

ராணி சம்பந்தர்

மண்ணில் அடங்கும் மானிடரில்
கண்ணிலின்று ஈரமில்லை என
எண்ணிய மனிதநேயம் கூனிக்-
குறுகியே கண்ணீர் சொரியுது

நாடுவோரில் இரக்கமே குறைய
வாடுவோரில் அன்பு மறையவே
தேடுவோரில் துன்பமும் கூடிடவே
கூடுபவரின் உதவிக்கரம் பொரிய

பலனை எதிர் பாராத பணிகளோ
தன்னலனில் வெளிவேஷம் புரிய
ஐம்புலன்களோ சிற்றின்பம் நாட
பணமூட்டை மூலதனம் முறிகிறது

சுயநலம் தன்னலம் அணிந்திடவே
பகட்டு ,புகழ் ,பொய்பிரட்டுத் திரட்டி
ஆலம் விதையா விருட்ஷமாகிறது
மனிதம் குறைந்து வேட்கை ஆகிட
மனிதநேயம் சிறகொடிந்தாய்த்
திரிகிறது .

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading