நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மனிதநேயம்

ராணி சம்பந்தர்

மண்ணில் அடங்கும் மானிடரில்
கண்ணிலின்று ஈரமில்லை என
எண்ணிய மனிதநேயம் கூனிக்-
குறுகியே கண்ணீர் சொரியுது

நாடுவோரில் இரக்கமே குறைய
வாடுவோரில் அன்பு மறையவே
தேடுவோரில் துன்பமும் கூடிடவே
கூடுபவரின் உதவிக்கரம் பொரிய

பலனை எதிர் பாராத பணிகளோ
தன்னலனில் வெளிவேஷம் புரிய
ஐம்புலன்களோ சிற்றின்பம் நாட
பணமூட்டை மூலதனம் முறிகிறது

சுயநலம் தன்னலம் அணிந்திடவே
பகட்டு ,புகழ் ,பொய்பிரட்டுத் திரட்டி
ஆலம் விதையா விருட்ஷமாகிறது
மனிதம் குறைந்து வேட்கை ஆகிட
மனிதநேயம் சிறகொடிந்தாய்த்
திரிகிறது .

Author: