மனிதநேயம்

ராணி சம்பந்தர்

மண்ணில் அடங்கும் மானிடரில்
கண்ணிலின்று ஈரமில்லை என
எண்ணிய மனிதநேயம் கூனிக்-
குறுகியே கண்ணீர் சொரியுது

நாடுவோரில் இரக்கமே குறைய
வாடுவோரில் அன்பு மறையவே
தேடுவோரில் துன்பமும் கூடிடவே
கூடுபவரின் உதவிக்கரம் பொரிய

பலனை எதிர் பாராத பணிகளோ
தன்னலனில் வெளிவேஷம் புரிய
ஐம்புலன்களோ சிற்றின்பம் நாட
பணமூட்டை மூலதனம் முறிகிறது

சுயநலம் தன்னலம் அணிந்திடவே
பகட்டு ,புகழ் ,பொய்பிரட்டுத் திரட்டி
ஆலம் விதையா விருட்ஷமாகிறது
மனிதம் குறைந்து வேட்கை ஆகிட
மனிதநேயம் சிறகொடிந்தாய்த்
திரிகிறது .

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading