நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மணி

மணிவகைகள் எண்ணில் பலவாகும்
மனிதரைப் பலவழி உயர்வாக்கும்
அணிந்திடு மணிகள் அழகாக்கும்
அணிபவர் மனத்தையும் சுகமாக்கும்
மணிமணி எழுத்தைக் கரமாக்கின்
மருளின்றிக் கருத்தும்
புலனாகும்

இறையணி கண்டுகலக்க ஏவுவதே கோயில்மணி
இதயத்தைத் தூண்டிநிதம் இயக்குவதே அதன்பணி
முறைகாட்டி குறைகழற்ற ஒலிப்பதுவே பள்ளிமணி
முற்றியபின் அரிகைகண்டு
உணவாவது நெல்லுமணி

நடைக்கிசைந்து அசைந்தொலிக்கும்
நங்கையணி கொலுசுமணி
நகையிடவே அணிந்தாளே
நகைக்கும் பொன்மணி
எடைகாட்ட உதவிடுமே கருஞ்சிவப்புக் குன்றிமணி
எடுத்தசைக்க நாவாட்டும்
ஏந்தியவர் கைமணி

விழிக்கூட்டில் கருமேட்டில் குடியிருப்பது
கண்மணி
விருந்தினர் வரவறிய வீட்டிலிருப்பது அழைப்புமணி
மொழியதிர வில்லசைத்தார்
மோகனமாய்ச்
சின்னமணி
சுழன்றாடி
ஒலியலையைத்
துப்பியது
வில்லுமணி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading