பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மணி

மணிவகைகள் எண்ணில் பலவாகும்
மனிதரைப் பலவழி உயர்வாக்கும்
அணிந்திடு மணிகள் அழகாக்கும்
அணிபவர் மனத்தையும் சுகமாக்கும்
மணிமணி எழுத்தைக் கரமாக்கின்
மருளின்றிக் கருத்தும்
புலனாகும்

இறையணி கண்டுகலக்க ஏவுவதே கோயில்மணி
இதயத்தைத் தூண்டிநிதம் இயக்குவதே அதன்பணி
முறைகாட்டி குறைகழற்ற ஒலிப்பதுவே பள்ளிமணி
முற்றியபின் அரிகைகண்டு
உணவாவது நெல்லுமணி

நடைக்கிசைந்து அசைந்தொலிக்கும்
நங்கையணி கொலுசுமணி
நகையிடவே அணிந்தாளே
நகைக்கும் பொன்மணி
எடைகாட்ட உதவிடுமே கருஞ்சிவப்புக் குன்றிமணி
எடுத்தசைக்க நாவாட்டும்
ஏந்தியவர் கைமணி

விழிக்கூட்டில் கருமேட்டில் குடியிருப்பது
கண்மணி
விருந்தினர் வரவறிய வீட்டிலிருப்பது அழைப்புமணி
மொழியதிர வில்லசைத்தார்
மோகனமாய்ச்
சின்னமணி
சுழன்றாடி
ஒலியலையைத்
துப்பியது
வில்லுமணி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading