வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

செல்வி நித்தியானந்தன் வரமாகும் வாய்ப்புகளே இயற்கையின் கொடையில் வளமான வாய்ப்புகள் இறைவனின் படைப்பில் பிறப்புஇறப்பு நியதிகள் வாழ்வு என்பதும் வரமான...

Continue reading

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

இயற்கை

மதியேந்தி வானம் ஒளிர
மகிழ்வோடு உலகும் உறங்கும்
கதிர்பூட்டிக் கதிரோன் உலவக்
கலைந்தோடும் கனவும் பறந்து
சுதிகாவு அலையும் சுழன்று
சுகமாக்கும் காலை நனைத்து
புதிதாயே பூத்த பூவும்
புத்தூக்கம் தருமே ஈர்த்து

குடைபிடித்த வானம் கறுக்க
கொட்டிடுமே மழையை மேகம்
சடைவிரித்து மரமும் செடியும்
சத்துணவு தருமே நாளும்
நடைபழகு நதியும் கடலும்
நழுவியோடும் நிலத்தைத் தழுவி
முடைகழற்றி வாழ நாணல்
முன்சரிந்து மூழ்கி நிமிரும்

வான்தொடும் மலையின் முகடு
வந்துமோதும் தென்றல் காற்று
காணுகாட்சி யாவும் இனிதே
கழற்றிவிட வந்தது துயரை
பேணுவகை யறிந்து இயற்கை
பேணுவார்கே உண்டு பயனே
தோணுவகை தோன்றின் செயற்கை
சேதாரம் காட்டும் இயற்கை

இயற்கையே எமது தோழன்
அதிடுவதே தானம்
செயற்கை வெறும் சின்னம்
செறிந்தாலோ வரும் ஊனம்

மனோகரி

நன்மை

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading