மனோகரி ஜெகதீஸ்வரன்

இயற்கை

மதியேந்தி வானம் ஒளிர
மகிழ்வோடு உலகும் உறங்கும்
கதிர்பூட்டிக் கதிரோன் உலவக்
கலைந்தோடும் கனவும் பறந்து
சுதிகாவு அலையும் சுழன்று
சுகமாக்கும் காலை நனைத்து
புதிதாயே பூத்த பூவும்
புத்தூக்கம் தருமே ஈர்த்து

குடைபிடித்த வானம் கறுக்க
கொட்டிடுமே மழையை மேகம்
சடைவிரித்து மரமும் செடியும்
சத்துணவு தருமே நாளும்
நடைபழகு நதியும் கடலும்
நழுவியோடும் நிலத்தைத் தழுவி
முடைகழற்றி வாழ நாணல்
முன்சரிந்து மூழ்கி நிமிரும்

வான்தொடும் மலையின் முகடு
வந்துமோதும் தென்றல் காற்று
காணுகாட்சி யாவும் இனிதே
கழற்றிவிட வந்தது துயரை
பேணுவகை யறிந்து இயற்கை
பேணுவார்கே உண்டு பயனே
தோணுவகை தோன்றின் செயற்கை
சேதாரம் காட்டும் இயற்கை

இயற்கையே எமது தோழன்
அதிடுவதே தானம்
செயற்கை வெறும் சின்னம்
செறிந்தாலோ வரும் ஊனம்

மனோகரி

நன்மை

Nada Mohan
Author: Nada Mohan