05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
மறதி
ஜெயம்
நினைவுகளின் சுமைகளை இறக்கிவைத்திடும் மருந்து
தனைமறக்க துணையாகும் மனதிற்கு விருந்து
அவமான கசப்புக்களை வெளியேற்றும் கருவி
கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டுமிந்த மறதி
கடந்துசெல்லா வலிகளுடன் இருப்பவரும் துவண்டு
கடவுளின் கொடையிதென சொல்வதும் உண்டு
மறக்கத் தெரிந்த மனிதர்களே மகிழ்வோடு
சிறக்கின்றார் ஆயுளுக்கும் மண்ணுலக வாழ்வோடு
ஆடிக்கொள்ளும் மனதிற்கும் இதனாலே ஓய்வு
தேடியே கண்டுபிடித்த ஞானிகளின் ஆய்வு
ஆண்டவன் நமக்களித்த அற்புத சக்தியிது
தாண்டிவிடாதே நிறைந்துவிடின் பேதலிக்காதோ புத்தியது
இழப்பதின் இரணங்களும் மறதியால் பஞ்சே
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே
பயணத்தை இலகுவாக்கும் மறதியின் சேவை
பயனுள்ள ஞாபகங்களே நியாயமாக தேவை
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...