30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
மறதி
ஜெயம்
நினைவுகளின் சுமைகளை இறக்கிவைத்திடும் மருந்து
தனைமறக்க துணையாகும் மனதிற்கு விருந்து
அவமான கசப்புக்களை வெளியேற்றும் கருவி
கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டுமிந்த மறதி
கடந்துசெல்லா வலிகளுடன் இருப்பவரும் துவண்டு
கடவுளின் கொடையிதென சொல்வதும் உண்டு
மறக்கத் தெரிந்த மனிதர்களே மகிழ்வோடு
சிறக்கின்றார் ஆயுளுக்கும் மண்ணுலக வாழ்வோடு
ஆடிக்கொள்ளும் மனதிற்கும் இதனாலே ஓய்வு
தேடியே கண்டுபிடித்த ஞானிகளின் ஆய்வு
ஆண்டவன் நமக்களித்த அற்புத சக்தியிது
தாண்டிவிடாதே நிறைந்துவிடின் பேதலிக்காதோ புத்தியது
இழப்பதின் இரணங்களும் மறதியால் பஞ்சே
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே
பயணத்தை இலகுவாக்கும் மறதியின் சேவை
பயனுள்ள ஞாபகங்களே நியாயமாக தேவை
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...