” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மறதி

ஜெயம்

நினைவுகளின் சுமைகளை இறக்கிவைத்திடும் மருந்து
தனைமறக்க துணையாகும் மனதிற்கு விருந்து
அவமான கசப்புக்களை வெளியேற்றும் கருவி
கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டுமிந்த மறதி

கடந்துசெல்லா வலிகளுடன் இருப்பவரும் துவண்டு
கடவுளின் கொடையிதென சொல்வதும் உண்டு
மறக்கத் தெரிந்த மனிதர்களே மகிழ்வோடு
சிறக்கின்றார் ஆயுளுக்கும் மண்ணுலக வாழ்வோடு

ஆடிக்கொள்ளும் மனதிற்கும் இதனாலே ஓய்வு
தேடியே கண்டுபிடித்த ஞானிகளின் ஆய்வு
ஆண்டவன் நமக்களித்த அற்புத சக்தியிது
தாண்டிவிடாதே நிறைந்துவிடின் பேதலிக்காதோ புத்தியது

இழப்பதின் இரணங்களும் மறதியால் பஞ்சே
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே
பயணத்தை இலகுவாக்கும் மறதியின் சேவை
பயனுள்ள ஞாபகங்களே நியாயமாக தேவை

Nada Mohan
Author: Nada Mohan