மறதி

வசந்தா ஜெகதீசன்
மறதி..
மனதினை ஆற்றும்
மாறாத துயர்களை விரட்டும்
மறதியே மகத்துவம்

சிலகணம் சிக்கலே
தேடலை விளைவாக்கும்
விவாதங்கள் உருவாகும்
முதுமையும் வாய்ப்பாகும்
முற்றாக மறக்க வைக்கும்

மறதியின் மகத்துவம்
மனிதத்தின் நியதி
தக்கத் துணையாகி
தாங்கியே தொடரும்
வாழ்வின் வரம்பில் மறதியும்
ஓர் எல்லை
மறக்கத் தகுமா
தருகின்ற தொல்லை!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading