மறதி

வசந்தா ஜெகதீசன்
மறதி..
மனதினை ஆற்றும்
மாறாத துயர்களை விரட்டும்
மறதியே மகத்துவம்

சிலகணம் சிக்கலே
தேடலை விளைவாக்கும்
விவாதங்கள் உருவாகும்
முதுமையும் வாய்ப்பாகும்
முற்றாக மறக்க வைக்கும்

மறதியின் மகத்துவம்
மனிதத்தின் நியதி
தக்கத் துணையாகி
தாங்கியே தொடரும்
வாழ்வின் வரம்பில் மறதியும்
ஓர் எல்லை
மறக்கத் தகுமா
தருகின்ற தொல்லை!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading