மாற்றம்

ராணி சம்பந்தர்

மாற்றம் ஒன்று வேண்டும் என்று ஆண்டு தோறும் வீதியிலே போராடியும் நீதி
தோற்றவில்லை இதுவரை

காலம் கனிவாகவே மாறிடும்
கூறிய மானிடரின் கோலம்
அதில் ஆறிய மனதின் மீதி
அலங்கோலம்

ஆலம் வேரான தமிழன் காணி கன்னமிட்ட குடி
ஏற்றத் தோணி சின்னம்
இட்டு நாணி ஏறிக் குந்திய புத்தர் பொன்னிட்டு எழும்பி நின்று உச்சந்தொட்ட பாணி

மிதமிஞ்சிய கஞ்சா கேவலம்
களவு,அடிதடி,மானபங்கம்,
துவக்குச்சூடும் , வெட்டுக் குத்தும் மாறிடுமா ? எம் மண்ணில் அந்த மாற்றம்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading