நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

“முகங்கள்”

நேவிஸ் பிலிப் கவி இல (624)

ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு நெஞ்சணைத்து
ஊஞ்சலாய் தாலாட்டி

தனிமையில் தவித்து
ஆறுதலுக்காய் அலைய
பாசமாய் கரம் நீட்டி
அன்னையென அன்புடனே

நலம் தந்த நல் முகங்கள்
கலப்படமற்ற முழு மதியாய்
புத்தம் புது முழு மலராய்
வாசமுள்ள ரோசாவாய்

காலைத் தென்றலோடு கலந்து
வசந்தத்தின் தூறலாய்
இன்பத்தின் சாரலாய்
நாளும் எம் வாசல் நாடி

பாரெங்கும் நடை போடும் கலைக் கூடம்
அகிலத்தின் சிறப்பாம் எம்பாமுகம்
அகவையின் உயர்வில் பெருமிதம்
காணும் உனக்கு என் வாழ்த்துக்கள்……
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan