“முகங்கள்”

நேவிஸ் பிலிப் கவி இல (624)

ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு நெஞ்சணைத்து
ஊஞ்சலாய் தாலாட்டி

தனிமையில் தவித்து
ஆறுதலுக்காய் அலைய
பாசமாய் கரம் நீட்டி
அன்னையென அன்புடனே

நலம் தந்த நல் முகங்கள்
கலப்படமற்ற முழு மதியாய்
புத்தம் புது முழு மலராய்
வாசமுள்ள ரோசாவாய்

காலைத் தென்றலோடு கலந்து
வசந்தத்தின் தூறலாய்
இன்பத்தின் சாரலாய்
நாளும் எம் வாசல் நாடி

பாரெங்கும் நடை போடும் கலைக் கூடம்
அகிலத்தின் சிறப்பாம் எம்பாமுகம்
அகவையின் உயர்வில் பெருமிதம்
காணும் உனக்கு என் வாழ்த்துக்கள்……
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading