முதுமை

ராணி சம்பந்தர்

முதுமையை எதிர்பாராத இளமை
பதுமையாகக் காலமெனும் படகில்
ஏறிக் கரைசேர முடியாது தவித்தது

புதுமையை எதிர்பார்த்த உரிமை
வலிமையாக மனமெனும் துடுப்பில்
மென்மையாக வலித்திடினும் தைரிய
இன்மையால் ஆடியாடிப் பரிதவித்தது

தனிமை எனும் பேரலைகள் மோதிடவே
நோய் எனும் பெரு சூறாவளியும் தாவிட
வாயிருந்தும் பற்களின்றி வியர்த்திட

பசி இருந்துமே உண்ணாது உறக்கம்
விழிக்க ருசி தெரியா நாக்கும் , மூசி
அடிக்கும் மூக்கும் , துடிக்கும் இதயமும்
பேச்சு மூச்சின்றியே பெருந்துணை
இளமை நினைவோடு மூச்சும்
அடங்கிப் போனதே ஆதரவின்றி .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading