அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மூப்பு வந்தாலே..

வியாழன் கவி 2217!!
மூப்பு வந்தாலே…
முனகலும் மூச்சிரைப்பும்
முடியாமையும் முயலாமையும்
நடுக்கமும் நாடிச் சோர்வும்
தடுக்க முடியா நோயும்
கூடவே வந்துவிடுமே..

நரையும் திரையும்
கரை காணா சோர்வும்
விடுப்பும் கடுப்பும்
விழி மங்கிய பார்வையும்
விருப்பமில்லா பசியும்
கூடவே வந்துவிடுமே..

புறு புறு பேச்சு
புரிபடாத் துயரமும்
மூலையில் முடக்கம்
முந்திவந்து சேரும்
முன் அனுபவம் இன்றியே
சாவை நாட வைக்கும்..
சிவதர்சனி இராகவன்
1/10/2025

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading