” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மூப்பு வந்தாலே…..

நகுலா சிவநாதன்

மூப்பு வந்தாலே…..

மூப்பு வந்தாலே முடக்கம் காணும்
காப்பும் இல்லை காப்புறுதியுமில்லை
தோப்பும் வராது தோள்நின்றவர் விலகுவர்
யாதும் முடிவற்ற அனுபவக்கீற்றாகும்

முதுமை அணைக்கும் மூப்பு
இளமையை நினைக்கும் இதயம்
வதுவை வாழ்வில் வந்தால் புரியும்
வகையாய் தடியைத்தேடும் தலைவிதி

மறதி வரும் மயக்கமும் வந்திடும்
உறுதியிங்கு நிலைகுலைந்து தாண்டவமாடும்
அனுபவம் காட்டும் அவதியும் கொள்ளும்
அனுதினம் வசையும் பாடும்

மூப்பு வந்தாலும் இளமையை நினை
இதயத்தில் உறுதியை பலமாக்கு
தாக்கும் நோயை எதிர்த்து நிற்க
தக்கபடி உடற்பயிற்சி செய்து பார்
தனித்துவ இளமை உனக்குள் சதிராடும்

நகுலா சிவநாதன் 1823

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading