” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மொழியன்னை..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2229!!

மொழியன்னை!!

மூச்சாகிப் பேச்சாகி
முன்னிற்கச் செய்பவள்
செம்மொழி தானாகி
சேர்த்தெம்மை அணைப்பவள்
இலக்கண வளம் சேர்த்து
இயங்கிட வைப்பவள்
தலைக்கனம் தானின்றித்
தவழ்ந்து மகிழ்பவள்..!!

முகவரி தானென்பாள்
முதல் வரி நின்றானாள்
ழகரத்தை இணைத்தே
அழகினை அணிந்தவள்
மூத்த மொழி தானாய்
முன்வந்தே ஆள்பவள்
வரியும் ஒலியும் சேர
வாய்த்த பெருமையிவள்..!!
சிவதர்சனி இராகவன்
22/10/2025

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading