அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மொழியன்னை..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2229!!

மொழியன்னை!!

மூச்சாகிப் பேச்சாகி
முன்னிற்கச் செய்பவள்
செம்மொழி தானாகி
சேர்த்தெம்மை அணைப்பவள்
இலக்கண வளம் சேர்த்து
இயங்கிட வைப்பவள்
தலைக்கனம் தானின்றித்
தவழ்ந்து மகிழ்பவள்..!!

முகவரி தானென்பாள்
முதல் வரி நின்றானாள்
ழகரத்தை இணைத்தே
அழகினை அணிந்தவள்
மூத்த மொழி தானாய்
முன்வந்தே ஆள்பவள்
வரியும் ஒலியும் சேர
வாய்த்த பெருமையிவள்..!!
சிவதர்சனி இராகவன்
22/10/2025

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading