மொழியன்னை..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2229!!

மொழியன்னை!!

மூச்சாகிப் பேச்சாகி
முன்னிற்கச் செய்பவள்
செம்மொழி தானாகி
சேர்த்தெம்மை அணைப்பவள்
இலக்கண வளம் சேர்த்து
இயங்கிட வைப்பவள்
தலைக்கனம் தானின்றித்
தவழ்ந்து மகிழ்பவள்..!!

முகவரி தானென்பாள்
முதல் வரி நின்றானாள்
ழகரத்தை இணைத்தே
அழகினை அணிந்தவள்
மூத்த மொழி தானாய்
முன்வந்தே ஆள்பவள்
வரியும் ஒலியும் சேர
வாய்த்த பெருமையிவள்..!!
சிவதர்சனி இராகவன்
22/10/2025

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading