யார்நான் ( 687) 07.11.2024

Selvi Nithuanandan

யார்நான்

தெருவிலே அழகாய்
தேன்சுவைக்கும் நீயாய்
தருவெனப் பெயராய்
தரணியில் நீயுமாய்

பிணிக்கும் மருந்தாய்
பிடிப்போர்க்கு விருந்தாய்
பிரத்தியேக நிறமுமாய்
பிரபல விற்பனையாய்

வறட்சிநில சாகுபடி
வருமானம் அத்துபடி
விற்றமீனும் நிறைந்தபடி
விவசாய விளைச்சலாய்

உணவிலும் சேர்வையாய்
உண்ணக் கனியாய்
புற்றுநோய்கு சவலாய்
புவனத்தில் நீயானாய்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

Continue reading