யார்நான் ( 687) 07.11.2024

Selvi Nithuanandan

யார்நான்

தெருவிலே அழகாய்
தேன்சுவைக்கும் நீயாய்
தருவெனப் பெயராய்
தரணியில் நீயுமாய்

பிணிக்கும் மருந்தாய்
பிடிப்போர்க்கு விருந்தாய்
பிரத்தியேக நிறமுமாய்
பிரபல விற்பனையாய்

வறட்சிநில சாகுபடி
வருமானம் அத்துபடி
விற்றமீனும் நிறைந்தபடி
விவசாய விளைச்சலாய்

உணவிலும் சேர்வையாய்
உண்ணக் கனியாய்
புற்றுநோய்கு சவலாய்
புவனத்தில் நீயானாய்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading