ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பூமித்தாய் “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 20.04.2023

அழகான ஒரு கோளம்
அடுக்குகள் கொண்ட மாடம்
அடைக்கலம் தந்த கூடம்
அதிசயங்கள் நிறைந்த தடாகம்
ஆதவனைச் சுற்றிவரும் ஆரணங்கு – இவள்
ஆதியாய் உதித்த அன்னை பூமித்தாயே !

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த பொக்கிஷம்
உலகையே சுமக்கும் தாய்மடி
உன்னதமான பூமித் தாய்மடி
பூமித்தாய்க்கென ஓர் தினத்தை
முத்தாப்பாய் தந்ததே ஐ.நா மன்றும்
சித்திரைத் திங்கள் இருபத்தியிரண்டினை !

எழில் மிகுந்து சோலைகள் மலர்ந்து
எண்ணற்ற வளங்களை அள்ளித் தந்து
எண்ணூறு கோடி மக்களையும்
எண்ணில்லா ஜீவராசிகளையும்
கண்போல காத்து தன்மடியினில் சுமந்து
உயிர்வாழ வைக்கும் உத்தமியை
உரமான வரமாகக் கிடைத்த பூமித்தாயை
உணர்வோடு வளம் சேர்ப்போம் என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan