ரஜனி அன்ரன்

“ புகையே பகை “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 01.06.2023

சுற்றுச் சூழலை மாசாக்கி
சுற்றத்தாரையும் பாழாக்கி
புற்று நோய்க்கும் ஆளாக்கி
இதர உறுப்புக்களும் பாதிப்பாகி
புகையைக் குடிக்கும் மனிதா
உன் உயிரைக் குடிக்கிறதே புகை !

புகை பிடிப்பதைக் குறைக்க
புகைத்தல் பற்றிய விழிப்புணர்வை ஊட்ட
புவனத்தில் ஆண்டு தோறும் மே31இனை
புகையிலை எதிர்ப்பு தினமாக்கி
புத்தூக்கம் கொடுக்கிறதே உலக சுகாதார நிறுவனமும் !

ஆண்டு தோறும் இலட்சக் கணக்கில் மக்களும் இறப்பு
ஆயுளையும் குறைக்கிறது புகைக் குடிப்பு
புகையிலைக்குள் புதைந்திருக்கும் நிக்கொட்டின்
புதைத்து விடுகிறது புகைப்பவரையும்
புகைப்பவர் பக்கத்தில் இருப்போரையும்
புகையே உயிருக்குப் பகை !

புகைத்தலைப் பகையுங்கள்
புன்னகையோடு வாழலாம்
புகை-இலை உயிருக்குப் பகை-இலை
புகையே உயிருக்குப் பகை !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading