தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ ஆளுமையொன்று சரிந்தது “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.08.2023

ஒலிபரப்புத் துறையின் ஆளுமையாளனை
கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரனை
கணீரெனும் செய்தி வாசிப்பாளனை
கலையோடு வாழ்ந்த கலைஞனை
தமிழோசையின் மூச்சானவனை
சட்டம் பயின்ற சட்ட வல்லுனனை
சடுதியாய் கவர்ந்தானே காலனும் விரைந்து !

இலங்கை வானொலியில் தொடங்கிய பயணம்
இங்கிலாந்தில் தமிழோசை வரை தொடர்ந்து
கலை இலக்கியம் நாடகம் ஊடகமென வளர்ந்து
தமிழோசைக்கு உயிர் நாதமாகி
பல்துறைக் கலைஞனாய் பண்பாளனாய் இருந்த
கலைத்தாயின் தலைமகனை
காவு கொண்டதே கொடிய விபத்தும் !

ஊடகத்தை வெளிச்சமாக்கி
தமிழோசைக்கு உயிர்கொடுத்த
ஆளுமையொன்று சரிந்தது
ஒலி அலையொன்று ஓய்ந்தது
உண்மைக் குரலொன்று மெளனித்ததே
மின்னல் வேகத்தில் வந்த மின்ரயிலினாலே !

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading