கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

ரஜனி அன்ரன்

“ மனிதஉரிமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 14.12.2023

இனமத நிற பேதமின்றி
சமத்துவத்தோடு கண்ணியமாய் வாழ
இலட்சியத்தோடு உருவானதே மனித உரிமை
ஒருவரின் உரிமையைத் தட்டிப் பறிக்க
யாருக்கும் உரிமை கிடையாது
மனித உரிமை பிறப்பின் உரிமையே !

ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ
சட்டத்தின் முன் சமனாக நிற்க
உரிமைகள் பறிபோகும்போது
சட்ட உதவியை நாடும் உரிமை
சட்டப்படியான மனித உரிமையே !

பேச எழுத சிந்திக்க
தகவல்களைப் பரிமாற
எல்லைகள் வகுத்திட முடியாது
ஜனநாயகத்தின் அடிநாதம் மனிதஉரிமைகளே
மனித உரிமைகளே மானிடர்க்கு பெருமை !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading