” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ மனிதஉரிமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 14.12.2023

இனமத நிற பேதமின்றி
சமத்துவத்தோடு கண்ணியமாய் வாழ
இலட்சியத்தோடு உருவானதே மனித உரிமை
ஒருவரின் உரிமையைத் தட்டிப் பறிக்க
யாருக்கும் உரிமை கிடையாது
மனித உரிமை பிறப்பின் உரிமையே !

ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ
சட்டத்தின் முன் சமனாக நிற்க
உரிமைகள் பறிபோகும்போது
சட்ட உதவியை நாடும் உரிமை
சட்டப்படியான மனித உரிமையே !

பேச எழுத சிந்திக்க
தகவல்களைப் பரிமாற
எல்லைகள் வகுத்திட முடியாது
ஜனநாயகத்தின் அடிநாதம் மனிதஉரிமைகளே
மனித உரிமைகளே மானிடர்க்கு பெருமை !

Nada Mohan
Author: Nada Mohan