மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ கல்வியெனும் கடல் “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 25.01.2024

உலகை மாற்றிடும் உன்னத சக்தி
எம்மையும் உயர்த்திடும் கருவி
அறிவொளியைத் தந்திடும் விளக்கு
அறியாமை இருளை அகற்றிடும் சுடர்
அதுவே கல்வியெனும் பெருங்கடல்
அனைத்துலக கல்வித் தினத்தை
அமுலாக்கித் தந்ததே ஐ.நா. மன்றும்
ஜனவரி இருபத்தி நான்காம் நாளை !

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்
அள்ளிச் செல்ல முடியாத செல்வம்
கொடுக்க கொடுக்க பெருகும் செல்வம்
அறிவுப் பெட்டகத்தினைத் திறக்கின்ற சாவி
அரும்பெரும் கல்விக் கடலே !

வாழ்க்கை முழுமை பெற
வாழ்வில் ஞானத்தைப் பெற
வாழ்வின் தேடல்களை விரிவாக்க
இலக்கினை நோக்கிப் பயணிக்க
வலக்கரமாய் இருப்பது
கல்வியெனும் பெரும் கடலே
கல்வியெனும் கடலுக்குள் நீச்சலடித்து
கல்விக் கரையினைத் தொட்டிடுவோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading