ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.07.23
கவி இலக்கம்-276
வரப்புயர

வாழ்வில் வீசுங் காற்று
திசையை மாற்றிடுமே

கொரோனாவால் ஒடிந்து
மடிந்தும் மனிதன் தன்
விடாமுயற்சியினால்
தனக்கெனத் தொழில்
தேடியதே

தேவையற்ற செலவு விட்டு
வாகனத்தில் போவது நடைப்
பயணமானதே

செயற்கை மருந்து விடுத்து
இயற்கை மருந்து உரமானதே

படிக்க மறந்தவன் திரும்பத்
திரும்ப படித்து பட்டம் பெற்று
நல்ல வேலை கிடைத்தும்
வீட்டுத் தோட்டமதில்
இறங்கி விளைச்சல் பெருகியதே

வரப்புயர நீருயரும் நீருயர
நெல்லுயரும் என்பதைத்
தொடரவே

தன் செலவு குறைத்து
உதிரத்தை வியர்வை ஆக்கி
சொந்தக் காலில் விந்தை
ஆனாரே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading