பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.07.23
கவி இலக்கம்-276
வரப்புயர

வாழ்வில் வீசுங் காற்று
திசையை மாற்றிடுமே

கொரோனாவால் ஒடிந்து
மடிந்தும் மனிதன் தன்
விடாமுயற்சியினால்
தனக்கெனத் தொழில்
தேடியதே

தேவையற்ற செலவு விட்டு
வாகனத்தில் போவது நடைப்
பயணமானதே

செயற்கை மருந்து விடுத்து
இயற்கை மருந்து உரமானதே

படிக்க மறந்தவன் திரும்பத்
திரும்ப படித்து பட்டம் பெற்று
நல்ல வேலை கிடைத்தும்
வீட்டுத் தோட்டமதில்
இறங்கி விளைச்சல் பெருகியதே

வரப்புயர நீருயரும் நீருயர
நெல்லுயரும் என்பதைத்
தொடரவே

தன் செலவு குறைத்து
உதிரத்தை வியர்வை ஆக்கி
சொந்தக் காலில் விந்தை
ஆனாரே .

Nada Mohan
Author: Nada Mohan